புதன், 2 டிசம்பர், 2009

கேள்வி - 1

உலகத்துல உள்ள பெரும்பாலான சமுகங்கள் போல நம்மளோட தமிழ் சமூகமும் ஆண் ஆதிக்க சமுகம் தான். நண்பர் ஒருவர் பெண் அடிமைப் பற்றி அனுப்பிய ஒரு மடலை வாசிக்கையில் ஒரு கேள்வி எழுந்தது,

ஆண்டு, ஆண்டவன் என்கின்ற சொற்களுக்கும், ஆண் ஆதிகத்துக்கும் தொடர்பு உண்டா?

பதில் தெரிந்தாலோ இல்லாட்டி ஏதாவது தோனுச்சுனா சொல்லுங்கப்பா.

சனி, 14 நவம்பர், 2009

பேசும் படம்

இந்த புகைப்படத்தை பற்றி சொல்ல எதுவும் இல்லை, பார்த்தாலே போதும்.

தினமலரில் வந்த படம்.

புதன், 13 மே, 2009

நாகரிகத்தைக் காணவில்லை, எங்கு தொலைத்தோம்? உங்களுக்கு தெரியுமா?

ஏழு வாரங்களுக்கு முன்னர், என்னுடைய நண்பன் ஒருவன் சென்னையில் ஒரு கட்டிட விபத்தில் துர்திஷ்ட்ட வசமாக காலாமாகிவிட்டான். மிகவும் பாசத்தோடும், கலகலப்போடும் இருக்கும் அவனது இழப்பினை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. "அண்ணா, அண்ணா" என்று வாயார கூப்பிடும் குறள் என் மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது, இருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் என்னை மிகவும் பாதித்த ஒரு சம்பவத்தில் இதுவும் ஒன்றாகும்.

ஒருவருடைய இழப்பே எப்படி நம்மை உலுக்கி விட்டதே, ஈழத்தில் இருக்கும் எமது மக்களின் நிலை இப்படி இருக்கும் என்று தீடிர் தீடிரென்று மனம் எண்ணிப் பார்த்து கொண்டே இருக்கிறது. அப்படி எண்ணும் பொழுதெல்லாம் ஒரு அழகான வனத்தை நொடிப் பொழுதில் சூரையாடிவிடும் காட்டு தீயைப் போல் மனதில் ஒரு சோகம் சட்டென்று பரவுகிறது.

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருட காலாமாக எப்பொழுது தனிமை கிடைத்தாலும், எங்கோ ஆரம்பித்தாலும் கடலினை சென்றடையும் நதியினைப் போல், எனது எண்ணங்கள் ஈழத்தை நோக்கியே செல்கிறது. நதியின் நீர் இவ்வளவு தான் இனிமையாக இருந்தாலும், கடலை சென்றடைந்த பின்னர் உப்பு கரிப்பது போல், ஈழத்தை நோக்கி எண்ணங்கள் செல்லும் பொழுது மனதில் ஒரு வெறுமை அப்பிக் கொள்கிறது.

ஈழத் தமிழன் என்ன பாவம் செய்தான்? ஈழத்தில் தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா? தனது அடிப்படை உரிமைகளை கேட்டது ஒரு குற்றமா? அதை அகிஹம்சை முறையில் கேட்டான், அவனது குறள் எடுபடவில்லை. ஒருவருடம், இருவருடமல்ல இருப்பது ஆண்டு காலத்திற்கு மேல் எவ்வளவு வலியுற்றாலும், நிதானத்தோடு கேட்டுப் பார்த்தான், நிலமை மோசமாகிக் கொண்டே வந்தது ஒழிய, பலனேதும் இல்லை.

எங்கெல்லாம் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படுகிறதோ அங்கெல்லாம் வன்முறை தலை தூக்கும் என்பது நிதர்சனமான் உண்மை.

பாலதினத்தில் நடந்தது போல், வியட்நாமில் நடந்தது போல் அவனும் ஆயுதம் ஏந்தினான். அதை தீவரவாதம் என்று பழித்தார்கள். அடே பதர்களே, அவனது வாதத்தை தீவிரமாக எடுத்து வைத்தான், அது தவறா?

முப்பது வருடக் காலம் ஒரு இனம் தங்களது உயிர்களை பற்றி கவலையில்லாமல், எந்த ஒரு பொருட் பிரதிபலனையும் எதிர்பாராமல், எனது இனம் நிம்மதியாக வாழ ஒரு இடம் கிடைக்குமென்றால் எமது உயிர்கள் ஒரு பொருட்டல்ல ன்று போராடி வருவது ஏன் எவருக்கும் புரியவில்லை? எந்த ஒரு மனிதனாவது விளையாட்டுக்கு உயிர் விட துணிவானா?

ஈழத்தமிழர்க்ளது உரிமை மறுக்கப்படாமால் இருந்திருந்தால், அவர்கள் ஆயுதம் ஏந்தும் ஒரு நிலை ஏற்பட்டிருக்குமா?

இன்னொரு கொடுமை என்னவென்றால், தமிழ் நாட்டில் வாழும் மிகுதியான் மக்களுக்கு ஈழப் பிரச்சனை என்றால் என்னவென்றே என்னும் சரியாக தெரியவில்லை. இத்தனை மனிதர்கள் மாண்டு வருகின்றார்கள், அப்படி என்ன தான் அங்கு நடக்கிறது என்று யோச்சிக்கும் அறிவு கூட இல்லை. "எனக்கு நேரடி பாதிப்பு எதுவும் இல்லப்பா, நான் எதுக்கு கவலை படனும்?" என்று கேட்பவர்கள் தான் அதிகம். ஆமாம் இவர்களுக்கு இந்தியாவில் நடக்கும் மற்ற பிரச்சனைகள் மட்டும் என்ன தெரிகிறதாக்கும், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இந்த மாக்கள், இல்லை இல்லை மாக்கள் எவ்வளவோ மேல், மனிதர்களிடம் இதை நான் எதிர்ப்பார்த்து விட்டேன்.

நாகரிகத்தை பூதக்கண்ணாடி வைத்து தேடி பார்த்தால் கூட கிடைக்காது போல், வரலாற்று பாதையில் நாம் எங்கு அதை தொலைத்தோம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன், உங்களுக்கு தெரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.