திங்கள், 18 ஆகஸ்ட், 2008

செயல் படுவோமா

சென்ற வாரம், சுகந்திர தினத்தன்று சில வேலைகளை முன்னிட்டு சுமார் 50 கி.மீட்டர் பயனித்திட நேர்ந்தது. மூன்று ஆண்டுகளாக சென்னையில் வாகனம் ஓட்டி வரும் நான், இந்த சுகந்திர தினத்தைப் போல் அமைதியான ஒரு நாளை கண்டதில்லை, அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி. அன்றிரவு படிப்பதற்காக வெளிநாட்டிற்கு பயனிக்க இருந்த எனது தோழனை வழியனுப்பி வைப்பதற்காக பெங்களூர்க்கு இரயிலில் பயனித்தேன். எனது பெட்டியில் 23 இடங்கள் காலியாக இருந்ததை நினைத்து வருத்தமாக இருந்தது. சென்னை நகரமே அன்று முழுவதும் எதோ ஒரு துக்கத்தை அனுஷ்ட்டித்தது போல் இருந்தது.


இந்த அமைதிக்கெல்லாம் காரணம் சமீபத்தில் நாடு முழுவதும் நடந்த குண்டு வெடிப்புகள் என்பதை அறிந்த பொழுது கஷ்டமாக இருந்தது. சுகந்திர தினத்தன்று மக்கள் வெளிய வருவதற்கு அஞ்சும் நமது நாட்டின் நிலையை நினைக்க வெட்கமாவகவும், வருத்தமாகவும் இருந்தது.

சுகந்திரதிற்கு பிறகு, இந்த 61 ஆண்டு பயணத்தில் தூரம் பல கடந்துள்ளோம் என்பதை நான் மறுக்கவில்லை, இந்த பயணத்தில் பல சாதனைகள் படைத்துள்ளோம், பல சாகசங்கள் செய்துள்ளோம், ஆனாலும்.........

இன்று உலகமே நம்மை நோக்கி ஓடி வருவதிற்கு முக்கிய காரணம் நாம் உலகத்திலே ஒரு மிக பெரிய சந்தை என்பதற்காக என்பதை மறுத்தளக்கியலாது. கணினி துறையில் நாம் முன்னிலையில் இருப்பதின் காரணம் இந்திய ரூபாயின் நிலையே முதன்மையான காரனமே தவிர நமது அறிவு இல்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை.

மக்கள் தொகையே நமது பலம் என்று பலர் என்னிடம் சொல்வர், தோழனே அப்படியென்றால் ஏன் ஒலிம்பிக்ஸில் நாம் ஒரு தங்கம் மட்டுமே வெல்ல முடிந்தது? சோற்றிக்கு வழியில்லாதவன் எவ்வாறு விளையாட்டை பற்றி நினைக்க முடியுமென்று கேட்காதே எத்தியோப்பியாவிலும் வருமை இல்லையா? அவர்கள் நம்மை விட அதிக தங்ககள் வென்றுள்ளனரே?

சற்று நிதானமாக சிந்த்தித்தோமானால், சமுதாய நலத்தின் மீது அக்கரை இல்லாத நமது மெத்தனப் போக்கு நமது நிலமைக்கு ஒரு முக்கிய காரணம் என்பது புரியும்.

நமது நாட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு அரசியல்வாதிகளை மட்டுமே குற்றும் சொல்வது முட்டாள் தனம். முடியரசு காலத்தில் "அரசன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே". ஆனால் மக்களாட்சியிலோ, "மக்கள் எவ்வழியோ, அரசும் அவ்வழியே". ஓட்டுப் போடுவது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும் ஒழிய, அத்துடன் நமது கடமை முடியவில்லை என்பதை உணர்ந்து செயல்பட்டிருந்தால் நாம் என்றோ ஒரு வளர்ந்த நாடாகியிருப்போம்.

கல்வி அறிவினை மக்களிடமும் எடுத்து செல்வதற்கு இக்காலத்து இளைஞர்கள் பலர் விழைந்து செயல்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளித்தாலும், ஒரு நாடு முன்னேற்றம் அடைய அனைவரையும் வெரும் ஏட்டுக் கல்வி படித்தால் போதாது என்பதை நான் உணர்ந்து செயல்பட வேண்டும்.

செயல்படுவோமா?