செவ்வாய், 30 செப்டம்பர், 2008

கடவுள் தேவையில்லை

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு நாளும், காலையில் எழுந்து செய்தித்தாளை எடுக்கும் பொழுதும், நேற்று எந்த ஒரு குண்டு வெடிப்போ, மதக்கலவரமோ நடந்திருக்க கூடாது என்ற ஒரு பதைப்பு மனதினில் எற்படுகிறது. இந்தியாவில், எங்கு பார்த்தாலும் மதத்தினை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனைகள், கொலைகள், கலவரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன். நம் நாட்டின் "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கோட்ப்பாடினையே இவை கேள்விக் குறியாக்கிவிட்டன்.

ஜூன் மாதத்தில் அமர்நாத் யாத்திரைக்கு, கஷ்மீர் மாநில அரசு நிலம் கொடுத்ததால் ஒரு பூதாகர பிரச்சனை வெடித்தது. கஷ்மீரும், ஜம்முவும் பிளவுப்பட்டன, மதத்தின் பெயரில் இந்துக்கள் தரப்பினிலிருந்தும், இஸ்லாமியர்கள் தரப்பினிலிருந்தும் இருந்த சமுக மற்றும் அரசியல் சக்திகள் ஆதாயம் தேடிக்கொள்ள முயன்றனே ஒழிய, உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை.மூன்று மாதங்களுக்கு மேல் நடந்த இந்த பிரச்சனையால் உயிர் சேதமும், பொருள் சேதமும், இயல்பு வாழ்க்கை நிலையும் பாதிக்கப்பட்டதான் மிச்சம்.

அடுத்ததாக ஒரிஸாவில், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான லஷ்மானந்தா சரஸ்வதி சுட்டுக்கொள்ளப்பட்டார். அக்கொலைக்கு மாவோயிஸ்ட்கள் பொருப்பேற்ற பின்னரும், இது போன்ற ஒரு தருனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்து மதவாத சக்திகள் அங்கிருக்கும் கிறித்துப சிறுபான்மையினர் மீது ஒரு களியாட்டததில் இறங்கின. கலவரக்காரர்களை தடுக்க முயற்சி செய்த ஒரு 20 வயது பெண்ணை எரிந்துக்கொண்டிருந்த ஒரு கட்டிடத்தில் தூக்கிப் போடப்பட்ட சம்பவமொன்றே அந்த வெறியர்களின் மூர்கதனத்தை எடுத்தியம்புகிறது.

அது மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும் கிறித்துவர்களுக்கு எதிரான கலவரங்கள் நாட்டில் எங்கு பார்த்தாலும் மதத்தையை அடிப்படையாகக் கொண்ட பிரச்சனைகள் காளான்கள் போல் முலைத்துக் கொண்டிருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் தொடர் குண்டு வெடிப்புகள் நகரங்களில் நடந்துக் கொண்டிருக்கிறது.

மனிதா, இதுவா உனது மதம் உனக்கு போதித்துள்ளது. மனிதர்களை வதைக்க வேண்டுமென்றா கீதையும், கூரானும், பைபிலும் கூறியுள்ளது. ராமர், யேசு, அல்லா மற்ற பிற கடவுள்களும் நீங்கள் கூறும் நற்குணங்கள் இருக்குமாயின், இப்பொழுது அரங்கேறிக் கொண்டிருக்கும் செய்லகளை அனுமதித்திருப்பார்களா?

மனதினை சீர்திருத்தி, அவனது வாழ்க்கை செம்மையாக ஆக்குவதற்காக உருவாக்கப் பட்டவைத்தான் மதங்களும், கடவுளும். ஆனால் இன்று உலகெங்கும் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கும், கலவரங்களுக்கும் மதமும், கடவுளும் ஒரு அடிப்படை காரணமாகிவிட்டன்.

காரல் மார்க்ஸ் "மதங்கள் சராசரி மனிதனின் போதைப் பொருள்" என்று சொன்னதில் ஒரு தவரும் இல்லை. பகுத்தறிவு(கவனிக்கவும் பகுத்தறிவு) இல்லாத மனிதனுக்கு, வாழ்க்கையின் மீது பிடிப்பு இல்லாத பொழுது அவனுக்கு நம்பிக்கை தருவதற்காகவே கடவுளும், மதங்களும் உருவாக்கப்பட்டன்.

இருப்பதாம் நூற்றாண்டில் விஞ்ஞானமும், ஏட்டுக்கல்வியும் முன்னேறி உள்ளதே ஒழிய, பகுத்தறிவில் மனிதன் மிகவும் பின் தங்கி உள்ளான். இன்று இருக்கும் பல பிரச்சனைக்களுக்கு அடிப்படை காரணம் மனிதனின் பிந்தங்கிய பகுத்தறிவு நிலையாகும்.

கடவுள் உண்டு என்பவரிடம் நான் சில கேள்விகளை கேட்கிறேன்

1. இந்த பெண்ணை கற்பழித்த பொழுது வழிபட்ட யேசு கிறுத்து அவளை என் காப்பாற்றவில்லை? அல்லது ராமரோ, கிருஷ்னரோ ஏன் அந்த மூர்கர்களை தடுத்து நிறுத்தவில்லை.

2. ஒருவர் விட்டு சென்ற பையை அவரிடம் கூடுக்க சென்ற சந்தோஷை, ஏன் ராமரோ, சிவனோ காப்பற்றவில்லை?

3. ஏன் தன்னை தரிசிக்க வந்த பக்தர்களையே, சாம்முண்டி தேவி காப்பாற்ற வில்லை?

நம்மையெல்லாம் ஒரு சக்தி உருவாக்கியிருக்கலாம், ஆனால் அந்த சக்தியால் இப்பொழுது எந்த ஒரு பயனும் இல்லை நண்பர்களே.

என்னை பொருத்தமட்டு, இப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவையில்லை.

திங்கள், 18 ஆகஸ்ட், 2008

செயல் படுவோமா

சென்ற வாரம், சுகந்திர தினத்தன்று சில வேலைகளை முன்னிட்டு சுமார் 50 கி.மீட்டர் பயனித்திட நேர்ந்தது. மூன்று ஆண்டுகளாக சென்னையில் வாகனம் ஓட்டி வரும் நான், இந்த சுகந்திர தினத்தைப் போல் அமைதியான ஒரு நாளை கண்டதில்லை, அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி. அன்றிரவு படிப்பதற்காக வெளிநாட்டிற்கு பயனிக்க இருந்த எனது தோழனை வழியனுப்பி வைப்பதற்காக பெங்களூர்க்கு இரயிலில் பயனித்தேன். எனது பெட்டியில் 23 இடங்கள் காலியாக இருந்ததை நினைத்து வருத்தமாக இருந்தது. சென்னை நகரமே அன்று முழுவதும் எதோ ஒரு துக்கத்தை அனுஷ்ட்டித்தது போல் இருந்தது.


இந்த அமைதிக்கெல்லாம் காரணம் சமீபத்தில் நாடு முழுவதும் நடந்த குண்டு வெடிப்புகள் என்பதை அறிந்த பொழுது கஷ்டமாக இருந்தது. சுகந்திர தினத்தன்று மக்கள் வெளிய வருவதற்கு அஞ்சும் நமது நாட்டின் நிலையை நினைக்க வெட்கமாவகவும், வருத்தமாகவும் இருந்தது.

சுகந்திரதிற்கு பிறகு, இந்த 61 ஆண்டு பயணத்தில் தூரம் பல கடந்துள்ளோம் என்பதை நான் மறுக்கவில்லை, இந்த பயணத்தில் பல சாதனைகள் படைத்துள்ளோம், பல சாகசங்கள் செய்துள்ளோம், ஆனாலும்.........

இன்று உலகமே நம்மை நோக்கி ஓடி வருவதிற்கு முக்கிய காரணம் நாம் உலகத்திலே ஒரு மிக பெரிய சந்தை என்பதற்காக என்பதை மறுத்தளக்கியலாது. கணினி துறையில் நாம் முன்னிலையில் இருப்பதின் காரணம் இந்திய ரூபாயின் நிலையே முதன்மையான காரனமே தவிர நமது அறிவு இல்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை.

மக்கள் தொகையே நமது பலம் என்று பலர் என்னிடம் சொல்வர், தோழனே அப்படியென்றால் ஏன் ஒலிம்பிக்ஸில் நாம் ஒரு தங்கம் மட்டுமே வெல்ல முடிந்தது? சோற்றிக்கு வழியில்லாதவன் எவ்வாறு விளையாட்டை பற்றி நினைக்க முடியுமென்று கேட்காதே எத்தியோப்பியாவிலும் வருமை இல்லையா? அவர்கள் நம்மை விட அதிக தங்ககள் வென்றுள்ளனரே?

சற்று நிதானமாக சிந்த்தித்தோமானால், சமுதாய நலத்தின் மீது அக்கரை இல்லாத நமது மெத்தனப் போக்கு நமது நிலமைக்கு ஒரு முக்கிய காரணம் என்பது புரியும்.

நமது நாட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கு அரசியல்வாதிகளை மட்டுமே குற்றும் சொல்வது முட்டாள் தனம். முடியரசு காலத்தில் "அரசன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே". ஆனால் மக்களாட்சியிலோ, "மக்கள் எவ்வழியோ, அரசும் அவ்வழியே". ஓட்டுப் போடுவது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும் ஒழிய, அத்துடன் நமது கடமை முடியவில்லை என்பதை உணர்ந்து செயல்பட்டிருந்தால் நாம் என்றோ ஒரு வளர்ந்த நாடாகியிருப்போம்.

கல்வி அறிவினை மக்களிடமும் எடுத்து செல்வதற்கு இக்காலத்து இளைஞர்கள் பலர் விழைந்து செயல்ப்பட்டு வருவது மகிழ்ச்சி அளித்தாலும், ஒரு நாடு முன்னேற்றம் அடைய அனைவரையும் வெரும் ஏட்டுக் கல்வி படித்தால் போதாது என்பதை நான் உணர்ந்து செயல்பட வேண்டும்.

செயல்படுவோமா?